~ WELCOME TO MANNAR ~ "வணக்கம்" உங்கள் வருகைக்கு நன்றி.

28 February 2012

மன்னாரில் ஹூனைஸ் பாருக் தலைமையில் முஸ்லீம்கள் ஆர்பாட்டம்


அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தை நிறுத்தக் கோரி ஹூனைஸ் பாருக் தலைமையில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு பேரணி ஊர்வலம் வந்தடைந்தது.வன்னி மாவட்ட பாராளுமன்ற

25 February 2012

மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு குறும் திரைப்படம்

மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. 
திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

23 February 2012

மன்னாரில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்குசத்துணவுப் பொதிகள்


மன்னார் மாவட்டத்தில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று வியாழக்கிழமை காலை சத்துணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து, குடும்பத்தை பராமரித்து வரும் 40 பெண்களுக்கே மேற்படி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணியளவில் மன்னார் திருமறைக்காலாமன்றத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குற்றச்சாட்டில் கைதான 4 பெண்களும் விடுதலை

மகாசிவராத்திரி தினத்தன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பெண்களும் விசாரணையின் பின் மன்னார் மாவட்ட மேலதிக நீதவானினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

திருக்கேதீஸ்வரத்தில் வியாபாரி மரணம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலுக்கு வியாபாரப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென்று மரணமடைந்துள்ளார். 

மன்னார் - யாழ். அரச பஸ்கள் சேவை நிறுத்தம்; பயணிகள் அசௌகரியம்

மன்னாரில் இருந்து சங்குப்பிட்டி வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பஸ்கள் நீண்டகாலமாக சேவையில் ஈடுபடாமை குறித்து மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

20 February 2012

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்


சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:
"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 19.02.2012 ம் திகதி கனடாவிலும், 20.02.2012 அன்று இலங்கையிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர்,
சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன.

19 February 2012

ஆண்டாங்குள நாகபூசனி அம்மன் ஆலயம் இல்லாமல் போகும் சாத்தியம்

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தில் அமைந்திருந்த  சிறிய நாகபூசனி அம்மன் ஆலயம் அடியோடு இல்லாமல் போகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு அக்கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர்.

சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!- சிவில் சமூகம் கோரிக்கை


தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூகம் மீண்டும் கோரியுள்ளது.
வவுனியாவில் இன்று காலை 10.20 மணியளவில் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற, கலந்துரையாடலில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

17 February 2012

மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் தொடர்ந்து அமுலில் இருக்குமா?

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அரசாங்கம் மீனவர்களுக்கு மண்ணைண்ணைய்க்கு 25 சதவீதமும் டீசலுக்கு 12சதவீதமும் மானியமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான மானிய அறிவிப்பு தொடர்ந்து அமுலில் இருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

16 February 2012

மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்தில்....( பட இணைப்பு)

சிவத்தமிழ் மானிடவியற் கழகமும் திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லமும் இணைந்து, எதிர்வரும் மகாசிவராத்திரியை முன்னிட்டு 14.02.2012 முதல் 20.02.2012 வரை ' சிவவார' க் கொண்டாட்டமும் இக்காலப்பகுதியில் சமூக ஆன்மீகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் 19ம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அறநெறிப் பாடசாலைகள் கலந்து கொள்ளும் அறநெறிச் செயலமர்வும் 20ம் திகதி சைவசமயப் பேராளர்கள் சங்கமமாகும் சிவத்தமிழ் மாநாடும் திருக்கேதீச்சரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மன்னாரில் இராணுவ முகாம் அமைப்பதற்கு மாதர் சங்கங்கள் எதிர்ப்பு! செல்வம் எம்.பி யிடம் மகஜர்-(2ம் இணைப்பு)


மன்னார், தரவன்கோட்டை வீதியில் இராணுவத்திற்கு ஒதுக்கிய காணியில் இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்துமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

15 February 2012

எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கைவிடக்கோரி மன்னார் மாவட்ட மீனவர் சமாஜம் மௌன ஊர்வலம்


எரிபொருள் விலையை உயர்த்தாதே! மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே அடிக்காதே கடற்றொழிலாளி வயிற்றில் அடிக்காதே! எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தி மீனவர்களை வாழவிடு! போன்ற கோஷங்களை முன்வைத்து மன்னார் மீனவ சமாசத்தினர் இன்று மௌன ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர்.

சிறப்புக் கட்டுரை

புகைப்படங்கள்

காணொளி

அறிவித்தல்

அன்பான எம் உறவுகளே உங்களின் கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /தேவாலய ,கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் எம் இணையத்தினூடாக பகிர்து கொள்ள ஆவலாக உள்ளீர்கலா உடனே எங்களுக்கு உங்களிடம் இருக்கும் காணொளிகள்,புகைப்படங்கள்'ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் செய்திகள் தரமாயின் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க நாம் காத்திருக்கின்றோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com

  © மன்னார் இணையம் The Professional Template by newmannar.com 2008

Back to TOP