28 February 2012
25 February 2012
மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு குறும் திரைப்படம்
மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது.
திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
23 February 2012
மன்னாரில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்குசத்துணவுப் பொதிகள்
மன்னார் மாவட்டத்தில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று வியாழக்கிழமை காலை சத்துணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து, குடும்பத்தை பராமரித்து வரும் 40 பெண்களுக்கே மேற்படி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணியளவில் மன்னார் திருமறைக்காலாமன்றத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
20 February 2012
மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்
சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:
"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 19.02.2012 ம் திகதி கனடாவிலும், 20.02.2012 அன்று இலங்கையிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர்,
சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன.19 February 2012
ஆண்டாங்குள நாகபூசனி அம்மன் ஆலயம் இல்லாமல் போகும் சாத்தியம்
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தில் அமைந்திருந்த சிறிய நாகபூசனி அம்மன் ஆலயம் அடியோடு இல்லாமல் போகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு அக்கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர்.
சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்!- சிவில் சமூகம் கோரிக்கை
தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையுடனேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூகம் மீண்டும் கோரியுள்ளது.
வவுனியாவில் இன்று காலை 10.20 மணியளவில் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற, கலந்துரையாடலில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
17 February 2012
மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் தொடர்ந்து அமுலில் இருக்குமா?
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அரசாங்கம் மீனவர்களுக்கு மண்ணைண்ணைய்க்கு 25 சதவீதமும் டீசலுக்கு 12சதவீதமும் மானியமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான மானிய அறிவிப்பு தொடர்ந்து அமுலில் இருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 February 2012
மகாசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரத்தில்....( பட இணைப்பு)
Subscribe to:
Posts (Atom)




.jpg)


.jpg)


Colombo Time




