~ WELCOME TO MANNAR ~ "வணக்கம்" உங்கள் வருகைக்கு நன்றி.
~உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனையை எமக்கு தெரிவித்தால் சம்மத்தபட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்...

26 May 2012

எனது முகத்திரையினை கிழிக்க ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துசெய்தி - விளக்குகிறார் அமைச்சர் றிசாத்


மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் என்ற பெயரில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் முகத்திரையினை கிழிக்க ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்து தங்களது இணையத்தளத்தில்( தமிழ்வின்)வெளியான செய்தி குறித்து எமது கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் கருத்தையும் தங்களது பிரசுரத்திற்காக அனுப்பி வைக்கின்றேன்.

தினச்சந்தை வியாபாரிகளை வெளியேற்ற நீதிமன்றத்தை நாடியுள்ளது நகரசபை; தீர்ப்பு வந்த பின்பே வாராந்த சந்தை என்கிறார் மன்னார் தலைவர் ஞானப்பிரகாசம்


மன்னார் தினச்சந்தை விவகாரம் தொடர்பாக நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் தினச் சந்தையில் உள்ள வியாபாரிகளை வெளியேற்ற முடியும். இதன் பின்னரே வாராந்த சந்தையை அமைக்கமுடியும். 

 இவ்வாறு தெரிவித்திருக்கிறார் மன்னார் நகரசபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்.

அமைச்சர் றிஸாட் பதியூதீனின் முகத்திரையை கிழிப்போம்: மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம்


மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகையை அவதூறாக பேசி, மன்னார் மாவட்டத்தில் தமிழ் - முஸ்ஸிம் மக்களுக்கிடையில் பேரினவாதத்தை தூண்ட முயலும் அமைச்சர் றிஸாட் பதியூதீனின் முகத்திரையை கிளிக்க அனைத்து கத்தோலிக்க மக்களும் ஒன்று சேர வேண்டும் என மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

25 May 2012

அமைச்சர் றிசாட்டுக்கு எதிராக கண்டன நிகழ்வு! அனுமதியளித்தது நீதிமன்றம்!!-(ஒலி இணைப்பு


அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப்பிற்கு எதிராக அவதூராகப் பேசியிருந்தார். இதனைக் கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தினுள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன நிகழ்வினை நடத்துவதற்கு மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளார்.

ஜேசு சிலுவையில் அறையப்படவில்லையாம்-ஈரானிய ஊடகம்

யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
.

பெரிய கடையைச்சேர்ந்த வயோதிப தாய் பிரதான பாலத்தடி கடற்கரையில் சடலமாக மீட்பு


மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற் படையினரின் காவலரனுக்கு முன்னாள் வபோதிப தாயின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


மன்னார்ஆயர் குறித்து வெளியிட்ட கருத்தில் உறுதியாக உள்ளேன்-றிசாத் பதியுதீன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை குறித்து ஆராய மூவரடங்கிய சட்டத்தரணி குழுவொன்றை தாம் நியமித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில். வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

எப்போது வருவார் அப்பா?; வவுனியா சத்தியாக்கிரகத்தில் கண்ணீர் வடித்த தாயிடம் ஏக்கத்துடன் கேட்டான் மகன்-படங்கள் இணைப்பு

அப்பா எப்போது வருவார்? நான் அப்பாவை பார்க்கமுடியாதா?'' என கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்த தாயிடம் கவலையுடன் கேட்டான் நான்கு வயது மகன். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இடம்பெற்றது.

மன்னாரில் கத்தோலிக்க குருக்களுக்கு அவசர பொலிஸ் அழைப்பாணை


தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வேலைவாய்ப்பு மற்றும் காணி இழுபறிகள் போன்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கிலும், மன்னார் ஆயருக்கு எதிராக அமைச்சர் ஒருவர் தெரிவித்த அநாவசியமான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மன்னார் மறைமாவட்ட குருக்கள் எதிர்ப்பு நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

24 May 2012

மன்னாரில் விசித்திர ஆட்டுக்குட்டி!! (படங்கள் இணைப்பு)

மன்னார் கீரி முருகன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில்  வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று கடந்த 01.05.2012 விசித்திர ஆட்டுக் குட்டியை ஈன்றுள்ளது.

இவ்விசித்திர குட்டிக்கு முகம், கண், மூக்கு அற்ற நிலையில் அதன் வாய்ப்பகுதி வித்தியாசமாக காணப்பட்டது. 

23 May 2012

தமிழ்க்கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பெரும் சத்தியாக்கிரகம்; நகரசபை மைதானத்தில் நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வர்


அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாளை வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெறவுள்ளது. சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

கொண்டாச்சிக்குடா கிராமத்திற்கான போக்குவரத்து சீரின்மை

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சிக்குடா கிராமத்திற்கான போக்குவரத்து சேவை சீரின்மை தொடர்பாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலை முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் கடிதமொன்றை முசலி பிரதேச பிரஜைகள் குழு சமர்ப்பித்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவர் எம்.சறோ ரூபன் குரூஸ் தெரிவித்தார்.

முசலி பிரதேச சபையில் மக்கள் கலரி அமைக்க கோரிக்கை

முசலி பிரதேச சபையில் மக்கள் கலரி அமைக்க மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் திட்ட இணைப்பாளரும் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளருமான அ.சுனேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular news- Last 30 days

சிறப்புக் கட்டுரை

புகைப்படங்கள்

காணொளி

அறிவித்தல்

அன்பான எம் உறவுகளே உங்களின் கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /தேவாலய ,கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் எம் இணையத்தினூடாக பகிர்து கொள்ள ஆவலாக உள்ளீர்கலா உடனே எங்களுக்கு உங்களிடம் இருக்கும் காணொளிகள்,புகைப்படங்கள்'ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் செய்திகள் தரமாயின் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க நாம் காத்திருக்கின்றோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com

  © மன்னார் இணையம் The Professional Template by newmannar.com 2008

Back to TOP